search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிர்சா முண்டா"

    பிர்சா முண்டாவின் பிறந்த நாளான இன்று தனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமான நாள் என்று பிரதமர் மோடி பேசினார்.
    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின விடுதலைப் போராட்ட வீரர் பிர்சா முண்டாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ராஞ்சியில் பிர்சா முண்டாவின் நினைவு அருங்காட்சியகம் திறக்கப்படடது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்று, அருங்காட்சிகத்தை திறந்து வைத்தார்.

    அப்போது பேசிய பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் பிறந்த நாளான நவம்பர் 15 ஆம் தேதி ஜன்ஜாதிய கவுரவ் தினமாக கொண்டாடப்படுகிறது என்றார்.

    ‘பழங்குடி சகோதர சகோதரிகள் மற்றும் குழந்தைகளுடன் எனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்துள்ளேன். அவர்களின் இன்ப துன்பங்களுக்கும், அன்றாட வாழ்க்கைக்கும், அவர்களின் வாழ்க்கைத் தேவைகளுக்கும் நான் சாட்சியாக இருந்தேன். எனவே, இன்று எனக்கு தனிப்பட்ட முறையில் உணர்வுப்பூர்வமான நாள்’ என்றும் மோடி குறிப்பிட்டார்.

    விழாவில் முதல்வர் ஹேமந்த் சோரன், மத்திய மந்திரி அர்ஜுன் முண்டா, முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

    கபாலி, காலா படங்களை தொடர்ந்து பா.இரஞ்சித் அடுத்ததாக சுதந்திர போராட்ட தியாகி பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்தியில் புதிய படமொன்றை இயக்கவிருக்கிறார். #PaRanjith #BirsaMunda
    கபாலி, காலா படத்திற்கு பிறகு பா.இரஞ்சித் தனது தயாரிப்பு நிறுவனமான நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்தார். இந்த நிலையில், அவர் அடுத்ததாக பாலிவுட் படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

    அந்த படம் இந்திய சுதந்திர போராட்டத் தியாகியும், பழங்குடியின மக்களின் சுதந்திரதத்திற்கு போராடிய பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மே மாதம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது. பியாண்ட் தி கிளெவ்ட்ஸ் படத்தை தயாரித்த நமா பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.



    படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித் தனது குழுவினருடன் பீகார், ஜார்க்கண்ட் பகுதியில் பிர்சா முண்டா பற்றிய, மக்களின் கருத்துக்களை சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. 

    அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் ஜெய் - ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமும் பிர்சா முண்டாவின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. #PaRanjith #BirsaMunda

    நயன்தாராவை வைத்து ‘அறம்’ என்ற வெற்றிப் படத்தை கொடுத்த இயக்குனர் கோபி நயினார், அடுத்ததாக போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க இருக்கிறார். #Aramm
    எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா என்று வரிசையாக தமிழில் வாழ்க்கை வரலாற்று படங்கள் உருவாகி வருகின்றன. இந்த வரிசையில் அறம் இயக்குனர் கோபி நயினார் பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையை படமாக்க உள்ளார்.

    வட இந்தியாவைச் சேர்ந்த பிர்சா முண்டா, நாட்டின் சுதந்திரத்துக்காகவும், பழங்குடி இன மக்களுக்காகவும் போராடி இளம் வயதிலேயே உயிர் நீத்தவர்.

    இவரது வாழ்க்கை வரலாற்றை இயக்கஇருப்பது குறித்து பேசிய கோபி நயினார், ‘ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்களுக்கு எதிராக பல செயல்களில் ஈடுபட்ட பிர்ஸா முண்டா, பற்றிய கதையை எழுதி முடித்துவிட்டேன்.

    சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதைக்காக கடந்த 2 ஆண்டுகளாய் பல்வேறு ஆவணங்களை திரட்டி இருக்கிறேன். இது ஒரு பெரிய பட்ஜெட் படமாக இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

    உச்ச நட்சத்திரம் ஒருவரை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    ×